இந்து மதத்தின் பேரால் அடக்க, ஒடுக்க, அறியாமையில் ஆழ்த்த, அவமதிக்க பாரபட்சமான ஓர வஞ்சனையாக நடத்தப்படும் அக்கிரமங்களை, அட்டூழியங்களை, பரப்பிடும் மூடநம்பிக்கைகளை செயல்களை அவர்களின் வேதங்களையே ஆதாரமாக சுட்டிக் காட்டி அம்பலப்படுத்தி கண்டித்து அச்சுறுத்தலுக்கோ எச்சரிக்கைகளுக்கோ பணிய மறுத்து உள்ளம் குமுறி
அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள் “உண்மையைத் தேடும் தமிழ் அறிவுலகத்துக்கு சமர்ப்பணம்" என்ற முகமனோடும் "மதம் என்னும் கோப்பையில் நல்ல பாலை ஊற்றி அருந்துங்கள்."‍ என்ற அறிவுரையுடன் "இந்து மதம் எங்கே போகிறது?"என்ற நூல் எழுதியுள்ளார்.
இத்தளத்தில் உள்ள அத்தனையும் முழுமையான ஆதாரங்கள், சுட்டிகள், நூல்கள், விபரங்கள் அமைந்தவை.. பதிவுகளுக்கு பதிப்புரிமை இல்லை..முன் அனுமதியின்றி மீள்பதிவு செய்யலாம். செய்யுங்கள். நீங்கள் ஓர் உண்மையான தமிழனாக‌ இருந்தால்... இந்நூலில் இருப்பதை உண்மை என உணர்ந்தால்... ஏனைய சகோதர தமிழர்களையும் இத்தளத்தை படிக்கத் தூண்டி உண்மையை உலகறிய‌ செய்யுங்கள்.; இந்தியத் திருநாட்டின் உண்மையான குடிமகன் என்ற அளவில் நீங்கள் இந்தக் கடமையில் தவறக் கூடாது.
தினசரி இந்த தளத்திற்கு வருகை தாருங்கள். நண்பர்களையும் பார்க்கச் செய்யுங்கள்.பதிவுகளை தங்களின் ஃபேஸ்புக்கில் அதிக அதிகமாக ஷேர் செய்யுங்கள்.
ADD TO YOUR BOOKMARK :- http://thathachariyar.blogspot.com -: ADD TO YOUR FAVORITES

கோத்ரம் என்றால் என்ன? பெண்கள் மாநாடா? வேதத்திலா?

‘கோ’களை அதாவது மாடுகளை கட்டி வைப்பவர்களின் அடிப்படையில் குழுவாக பிரிக்கப்பட்டதுதான் கோத்ரம்.

என்னது? பெண்கள் மாநாடா? அதுவும் வேதத்திலா? என்ன சொல்கிறீர்கள்? என்ற உங்கள் பிரமிப்பு புரிகிறது.அந்த ஸ்த்ரீ சம்ஸாதத்துக்குள் நாம் நுழைவதற்குமுன் பொதுவான சபாவைப் பற்றி பார்த்து விடுவோம்.

இந்துமதம் எங்கே போகிறது. பகுதி 36

ரிக் வேதத்தில் வருகின்ற ஸ்லோகங்கள் இவை.“நஸா சபாயத்து நபாது செய்ஹநஸா சபாயத்து விபாது செய்ஹ”

அதாவது... எதையுமே எந்த விஷயத்தையுமே கூடிப்பேசி, விவாதித்து இந்த முடிவெடுத்தால் நல்லது, கெட்டதுகள் என்னென்ன ஏற்படும் என்பதை பலரின் கருத்துக்கு விட்டு பெரும்பாலும் என்ன சொல்கிறார்களோ? அதை முடிவாகக் கருதவேண்டும்.”

- இன்று நமது பார்லிமென்ட் (Parliament) நடைமுறையில் உள்ள தத்துவத்தை ரிக் வேதச் சிந்தனை யாளர்கள் ரீங்காரமிட்டுள்ளார்கள்.சரி... சபாவில் குழப்பம் குளறுபடி வந்தால்?

“சங்க சத்வம்சம்ப சுத்வம்சம்போ மனாம்ஸி ஜானதாம்”ஒரே பாதையில் நடங்கள், ஒரே வழியில் சிந்தியுங்கள். ஒன்றாகப் பேசி முடிவெடுங்கள். (Walk United, Think United, Talk United) என ஒற்றுமையாக வலியுறுத்தி ‘சபா’வை ஸ்திரப்படுத்தச் சொல்கிறது ரிக் வேதம்.

அதாவது... வேத காலத்தில் சமூக கட்டமைப்புக்குள் கட்டுப்பட்டு வளர்ந்த மக்களின் பிரச்சினை களை தீர்த்துக் கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்புதான் சபா. இந்த சபாவில் சிந்தனை சக்தி மிகுந்த ரிஷிகள் அமர்ந்திருப்பார்கள். அந்தந்த குழுமத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றாகக் கூடி தத்தமது எண்ணங்களை எடுத்துரைப்பார்கள்.

இறுதியாக ரிஷிகள் இதற்கொரு முடிவு சொல்வார்கள். சரி... இங்கு பெண்களைப் பற்றியே எங்கும் சொல்லக் காணோமே. பிறகு, பெண்கள் எப்படி வருவார்கள்?

உங்கள் கேள்விக்கு... இன்னொரு வேத ஸ்லோகம் விடை சொல்கிறது...

‘தம்பதிஇவ க்ரஹிபிதா ஜனேஸி...’அதாவது நீ எங்கு சென்றாலும்... யாரைப் பார்க்கச் சென்றாலும்... ஏன் கடவுளையே பார்க்கச் சென்றாலும் உன் மனைவியை பத்தினியை உடன் கூட்டிப்போ.

வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டி வைக்கச் சொன்ன வேதம்... கால வளர்ச்சியில் இதனை சொல்கிறது என நாம் எடுத்துக் கொள்ளலாம். (ஏனென்றால், வேதங்கள் திடுதிப்பென திடீரென்று ஒரே பொழுதில் உண்டாக்கப்பட்டவை அல்ல...)இதன்படி ஒவ்வொருத்தரும் சபாவுக்கு வரும்போது தன் மனைவியை கூட்டிவர ஆரம்பித்தான். அப்படி வரும்போதுதான் பெண்கள் சபாவுக்கு வரத் தொடங்கினார்கள்.

அப்போது வெளியுலக பிரச்சினைகள் அவர்கள் காதிலும் விழுந்தது. கணவனின் கட்டளைகளாகலேயே நிரம்பிப் போயிருந்த காதுகளில் சமூகப் பிரச்சினைகள் வந்து விழுந்தன.

வாயில்படி தாண்டியிராத பெண்களின் வாயிலிருந்து பொதுக் கருத்துகள் புறப்பட ஆரம்பித்தன.பிரச்சினைகளைப் பற்றி பெண்கள் பேசிய பேச்சுகளை கேட்ட ஆண்கள் அசந்து போய்விட்டனர். எப்படி இவர்களுக்கு இப்படியெல்லாம் பேசத் தோன்றுகிறது? என வியந்தனர்.

இந்தக் காட்சியை“அபிப்ராவந்த்தா சமனே இவயோஷாஹதகல்யாண்யஹ ஸ்மயமானாஹா அக்னிம்...”என்று வேத ஸ்லோகம் சொல்கிறது.
“எல்லாம் கூடியிருக்கிற இடத்திலே பெண்கள் ஆண்களுக்குச் சமமாக உட்கார்ந்திருக்கிறார்கள். அது மட்டுமா? அங்கே வெளிச்சத்துக்காக வளர்க்கப்பட்டிருக்கும் அக்னியைச் சுற்றி பெண்கள் அமர்ந்து கொண்டு சிரித்தபடியே பேசிக் கொண்டிருக்கிறார்கள்.”

இதைப் பார்த்துதான்... அழைத்து வந்த ஆண்கள் வியப்படைந்து போய்விட்டார்கள். அவர்களின் வியப்புக்கு வேதம் விளக்கம் சொல்கிறது கவனியுங்கள்.“°த்ரீநாம் த்விகனம் ஆஹாரம் புத்தீஸ் சாபி சதுர் குணம்”அதாவது வீட்டில் ஆண்கள் சாப்பிட்டு மிச்சம் வைத்துவிட்டு வெளியே போய்விடுவார்கள்.

இதையெல்லாம் பெண்கள்தான் சாப்பிடுவாள். அதனால், அந்த ஆண் சாப்பிட்ட சாப்பாட்டைவிட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமாகவே அவள் ஆஹாரம் புசிப்பாள். இரண்டு மடங்கு உணவு அதிகமாக உண்ணும் பெண்... ஆணைவிட நான்கு மடங்கு அதிகமாக அறிவைப் பெற்றிருப்பாள்.

இவ்வாறு ஆண்களைவிட நான்கு மடங்கு அதிகமாய் ‘புத்தி’ பெற்ற பெண்கள் வேத மந்த்ரங்களையும் இயற்றினார்கள். அத்யயனம் செய்தார்கள் என்பது வேதமே ஒப்புக்கொள்ளும் அளப்பரிய உண்மை.“அபகேஸ்ம ஸ்த்ரியோமந்த்ர கிருத ஆசுஹீப்ரா கல்பேது நாரீனாம்பௌஞ்ச்சீ பந்தது இஷ்யரேஅத்யாபனந்த வேதானாம்...”பெண்கள் வேதமந்த்ரங்களையும் இயற்றியுள்ளார்கள்.

பெண்கள் இயற்றிய வேத மந்த்ரங்களை பெண்களே அத்யயனம் அதாவது தினசரி உச்சரித்தும் வந்துள்ளார்கள்.குறிப்பாக ஆத்ரேய கோத்ரத்துப் பெண்கள் இதில் சிறப்பாக விளங்கினார்கள். ஆத்ரேய கோத்ரம் என்றால் ஆத்ரேயர் என்ற ரிஷியின் வழிவந்தவர்கள் என்று பொருள்.

கோத்ரம் என்றால் என்ன? ஒன்றும் பெரிய அர்த்தம் இல்லை.வேத காலங்களில் மாடுகளை குழு குழுவாக கட்டி வைத்திருப்பார்கள். ஒரு ரிஷியின் குழுவினர் மாடுகளை ஓரிடத்தில் சேர்த்து கட்டி வைத்திருப்பார்கள்.‘கோ’களை அதாவது மாடுகளை கட்டி வைப்பவர்களின் அடிப்படையில் குழுவாக பிரிக்கப்பட்டதுதான் கோத்ரம்.

இப்படியாக ஆத்ரேய கோத்ர பெண்கள் அறிவில் மிகச் சிறந்தவர்களாக விளங்கினர். இப்படிப்பட்ட பெண்கள்தான் ஸ்த்ரி சம்ஸாதம் அதாவது பெண்களுக்காக மட்டும் கூட்டங்களை கூட்டினர். இதுதான் பெண்களின் மாநாடு... ஒருநாள் இந்த மாநாட்டில்...? அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் (தொடரும்)

கட்டுரை தொடர்ந்து வளர வளர நீங்கள் அறியாத மறைக்கப்பட்ட தகவல்கள் உங்களை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும். தொடர்ந்து வாருங்கள்.

பகுதி 35. பெண் வீட்டுக்குள்ளேயே தான் இருக்கவேண்டும்.

பகுதி 37. மாதவிடாய் பெண்களை விலக்கிவையுங்கள். ப்ரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன?

No comments:

Post a Comment